கோவை மாநகராட்சி, சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் இணைந்து கர்பிணி பெண்களுக்கு "அமிர்தானியம்" திட்டம் துவக்கம்

கோவை மாநகராட்சியும், சன்லேக் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து மாநகராட்சி நகர் நல மையங்களுக்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறுதானியங்களான பொருட்களை வாரம் தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக 6 மாதகாலத்திற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டு அதற்கு "அமிர்தானியம்" என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக இன்று (ஏப்ரல் 13) காலை 9.30 மணி அளவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோர் தலைமையில் எஸ்.எம்.எம்.ஹோம் நகர் நல மையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கும் 250 கிராம் திணை சிறுதானியம் பாக்கெட் சுமார் 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி ஆணையர் சிறுதானியங்களின் நன்மைகள், அதனால் உடலில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்து அங்குள்ள அனைவருக்கும் விளக்கி கூறினார்.

இவ்விழாவில் மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், எஸ்.எல்.எம்.ஹோம் மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் இளமதி மற்றும் மருத்துவர் ஹேமலதா, உதவி பொறியாளர் மகேஷ், உதவி செயற்பொறியாளர் கலாவதி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...